Posts

Image
                                                                                       The most pressing question in few of us. Am I the body? Is there a mind? What is soul? Am I the body, mind and the soul? These are the questions asked by a few millions among the trillions around this planet earth. The answer is simple:  THERE IS NO 'I'. We do not exist outside the universe. Since we do not exist outside the universe, all that is existing is ONLY THE UNIVERSE.  In that case, what are soul, mind & body?  <<<< To be continued >>>>

மனிதர் புரிந்து கொள்ள.....

Image
                                                                        நீல வானை கடந்தன வெள்ளைப் பறவைகள்....  வானம் வெள்ளையானது, பறவைகள் நீலமாயின.  மழை பொழிந்தது..... மண் மகிழ்ந்தது,  வானம் வறண்டது. என்னவளை நான் கடந்தேன்.......  என் நேசம் அவளிடத்தில்,  அவள் சுவாசம் என்னிடத்தில்.  அவள் அன்பை பொழிந்தாள் என் மீது....  என் உள்ளம் நெகிழ்ந்தது,  அவள் உள்ளம் மகிழ்ந்தது.  ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டுமாம் இழப்பில்லை இங்கே எவருக்கும்.  இந்த விந்தை எப்போதும் நிகழ்வதெப்படி? எங்கள் அன்பு.... எத்தனை கொடுத்தாலும் குறைவதில்லை  எத்தனை பெற்றாலும் நிறைவதில்லை  வெள்ளையாய் மாறும் நீலவானில்லை  நீலமாய் மாறும் வெள்ளைப் பறவையில்லை. என்னை இழந்து நான் அவளைப் பெறுவதில்லை  தன்னை இழந்து அவள் என்னைப் பெறுவதில்லை  நான் நானாக என் போ...

விபரீத விளையாட்டு

Image
                                                                   ஒரு இதழ் சிப்பியிலிருந்து உதிர்ந்தன மூன்று வார்த்தை முத்துக்கள்   நான் திகைத்துப் பார்த்தேன் அவள் நகைத்துச் சென்றாள் என் வாழ்க்கையோடு ஒரு பெண்ணின் விபரீத விளையாட்டு மீண்டும்.

சஹாரா பூக்கள் பூத்ததோ....

Image
  உச்சத்தில் சூரியன் உக்கிரமாய். எப்போதும் பூக்கும்  வேர்வைத் துளிகளின் இடத்தில்  இப்போது பூக்களாய் பனித்துளிகள். காதை கொடு  கிசுகிசுக்கிறேன் காரணத்தை. உன் செவிகளின் அழகில்  என் இதழ்கள் இறக்காமல் இருக்குமானால்.   நேற்றைக்கு .... என் செல்லமே என நீ என்னை விழித்ததாய் ஓர் உணர்வு ஒரு வேளை அது என் கற்பனையோ என கடந்தேன் தளர்வுடன் இன்று .... அன்பில் துடிக்கும் உன் அழகு இதயம் என் கண்களில் வந்து போனது " கண்டது நிஜம்தானா ? சஹாரா பூக்கள் பூத்ததோ ?" என வியந்தேன் நான் தவிக்கிறேன், துடிக்கிறேன். எப்படி அறிவேன் நிஜம்தான் இது என்று? இங்கு... உச்சத்தில் சூரியன் உக்கிரமாய். உடலுக்கு வெளியே சஹாரா, உள்ளத்தினுள்ளோ அண்டார்டிகா.  இருபது வயது பையனின் இதயம் போல இந்த   வயதிலும்  பட படக்கிறது  இந்த அரைக்கிழவனின் அழகு இதயம். என் இதயம் அழகு என்பதை அறிவேன்  நீயே அழகாய் அதை அலங்கரிப்பதால்.   கண்களில் இருக்கலாம் கோளாறு  உன்னை அவை பார்ப்பதில்லையே! ஆனால்... உன்னை சுமக்கும் என் உள்ளத்தில் ஏனிந்த பேஜாரு?! உன்னிடத்திலோ...

தென்றல் வந்து தீண்டும் போது .....

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றான இந்த " தென்றல் வந்து தீண்டும் போது " பாடலின் சரணங்களை எனக்கு மேலும் பிடித்த வகையில் மாற்றி எழுதி பார்த்ததில் ..... M: உன்னை நானும் பார்த்ததாலே  என்ன வண்ணமோ மனசுல  என்னை நீயும் பார்த்ததாலே  என்ன வண்ணமோ நினைப்புல  நித்தம் நித்தம் கேக்குதம்மா  நெஞ்சினிலே உன் சத்தம்மம்மா  உன் சத்தத்துக்கு ஏத்தபடி  என் எண்ணமெல்லாம் மாறுமம்மா  மென்மையம்மா உன் உள்ளத்த நானும் கண்டேன்  கண்ணம்மா நீ என் செல்ல பெண்ணே  உன்னை நானும் பார்த்ததாலே  என்ன வண்ணமோ மனசுல  என்னை நீயும் பார்த்ததாலே  என்ன வண்ணமோ நினைப்புல  F:  ஏனென்று தெரியாமலே  என் மனசும் மயங்குது  நம் உறவு புரியாமலே  என் உசுரும் உருகுது 

ஆடம் ஆப்பிளும் ....ஆலகால விஷமும்

Image
                                                                                            அவனுக்குத் தெரியாதா  ஆலகால விஷம் அவளென்றே இருந்தும் ஏன் விழுங்கினான்  அலறிப் புடைத்து ஓடி வந்து  சங்கைப் பிடிப்பாள்  விழுங்கிய நஞ்சு  இரைப்பைக்குள் வீழாமல்  தொண்டைக் குழியில்  காலத்திற்கும் சுற்றித் திரியட்டும்  என்கிற திட்டமோ  அப்பாவி குரல் பெட்டி  அவன் விட்ட கதையில்  ஆடம் ஆப்பிள் ஆனது  இவன் விட்ட கதையில்  ஆலகால விஷம் ஆனது  ஆணின் குரலாக பெண்  அவனுக்கு ஆடம் ஆப்பிள்  பெண்ணின் குரலாக ஆண்  அவளுக்கு ஆலகால விஷம்  என்று எப்போதடா  புதுக்கதை விடப் போகிறீர்கள்?  எக்கேடோ கெட்டுத் தொலையுங்கள்  நீங்கள்.  பக்கோடா சாப்பிட பறந்த...

வாழ வைக்கும் காதலுக்கு ஜே.....

Image
                                                                                        விடாது கொட்டிய மழையில்  கட்டாந்தரை களிமண் பூமி  களகளத்து கொழ கொழ சகதியானது.  வீட்டில் வேண்டுமளவும் வெங்காயம் இருக்க  இன்னும் கொஞ்சம் வாங்கிவரச் சொல்லி  எதற்காக இந்த வெங்காயத்தை  விரட்டி அடிக்கிறாள்  என் காதல் மனைவி?  வியப்போடு வெளியேறினேன் வெள்ளை வேட்டியும் சட்டையுமாய்.  கொழ கொழ சகதிகளுக்கு நடுவே  நடை பயணம் நகைச்சுவை ஆனது.  வித்தைக்காரன் போல் தத்தித்தாவி  கடைவீதி சென்று திரும்பியாயிற்று  கஷ்டப்பட்டு.  வெற்றிக் களிப்புடன்  திரும்பி வந்தவனை  விரக்தியோடு பார்க்கிறாள் விஷமக்கார வாழ்க்கைத் துணைவி.    வீட்டில் வேண்டுமளவும் இருக்க  மேலும் வாங்கிவரச் சொல்...

விடுகதையோ இந்த வாழ்க்கை ........?

Image
                                                                                  வினாவுக்கான விடையாக  விடுகதையே வாழ்க்கை எனில்  விடையில்லா விடுகதை ஏது? விடுகதையே வாழ்க்கை எனில் வாழ்க்கையின் விடை எது?  எவனோ விடுகதை விடுப்பவன் ? ஏனோ அவன் அதை விடுப்பது? இந்தக் கேள்வியும் எந்தக் கேள்வியும்  இல்லாத வாழ்க்கை கேலி. இந்தக் கேள்வியும் இன்னும் கேள்விகளுமென  இருக்கும் வாழ்க்கை மலர் வேலி. இந்தக் கேள்விக்கும் எந்தக் கேள்விக்குமான  பதில்கள் உங்கள் பக்கத்தில்.  தட்டுங்கள் திறக்கப்படும்,  கேளுங்கள் கொடுக்கப்படும்.  எவனோ விடுகதை விடுப்பவன் ? விடுப்பவன் இறைவன். ஏனோ அவன் அதை விடுப்பது ?  விடுப்பது விடை தரவே. இப்படி..... இந்தக் கேள்விக்கும் எந்தக் கேள்விக்குமான  விடை தெரிந்தவன் வாழ்க்கைப் பாதையில்  எப்போது...

மாக்களாய் மக்கள்....

Image
                                                                                                 கேட்கிறீர் நீவீர் இரவில் விழிப்பு  பகலில் உறக்கம் ஏன் எனவே. உண்மைகளை  இலட்சம் இலட்சமாய்  கொட்டிக் கொடுக்குது இரவு,  பகல் பொழுது தருவதில்லை  பத்து பைசா எனக்கு என்கிறேன் நான். "ஐயனே தவிர 'ஐ' என்றில்லை என்கிற உண்மை அறிந்து கொள்ள  உதவும் கரை இரவு; இவ்வுண்மை உணராதவரை  உதவா கரை பார் போற்றும் பகல்.  சிந்திக்கத் துணிவீரோ நீவீர்?" - உண்மை சொல்லி  உரக்க கேட்கிறான் நம் இறைவன். ஊர் உறங்கையில் விழிப்பும்  ஊர் விழிக்கையில் உறக்கமும்  இயற்கை குறித்த வெறுப்பில் விளைந்தது அல்ல. இயல்பான சிந்தனை வறண்டு மாக்களாய் போன என் மக்கள் குறித்த வேதனையில் மலர்ந்தது அது.  ம...

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

Image
                                                                                  இயல் இசை நாடகம் என  கலைகள் பல விதம்.  கலைகளின் ரசிகர்கள் பல விதம்  அதில் நான் ஒரு விதம்.  ரசிகர்களின் ரசனைகள் பல விதம்  அதில் எனது புது விதம்.  நீ பார்ப்பவை எல்லாம் படங்கள் அல்ல  விழிகள் சொல்கின்றன.  படங்களில் என்ன படிப்பது  பாடமா? படிப்பினை இல்லாத படங்கள்  வெறும் வண்ணக் கலவையா?  வெறும் வண்ணக் கலவைக்கும்  என்னுள்ளம் உருகுவதேனோ? நீ கேட்பவை எல்லாம் பாடல்கள் அல்ல  செவிகள் சொல்கின்றன.  பாடல்களில் என்ன பார்ப்பது  நுட்பமா?  நுட்பங்கள் இல்லாத பாடல்கள்  வெறும் ஓசைக் குலவியா? வெறும் ஓசைக் குலவியிலும்  என்னுள்ளம் ஒன்றிக் குவிவது ஏனோ? ரசிகர்கள் பல விதம்  நான் ஒரு விதம்.  ரசனைகள்...

Religion(s) Vs Spirituality - Duality Vs Singularity........

Image
                                                                                           'Religion' requires one or more God for its existence. Since religion is based on the belief that there is God who creates, provides sustenance to these creatures for a designated time period and then destorys these creatures, the creatures are strongly advised to fear this God, worship It and pray to It either to thank for the sustenance or to ask for more of it or for both. The worship and prayer involves rituals depending on which religion the creature belongs to or follows & practices. This Creator/God and creatures relationship is called 'duality' since there are two entities: God/Creator & creatures.  'Spirituali...

வாராயோ என் தோழி வாராயோ?

Image
                                                                                       உடல் முதிர்ச்சி  உண்பதின் ஊட்டம் பொறுத்து.  அறிவு முதிர்ச்சி  தேடலின் ஆழம் பொறுத்து.  மன முதிர்ச்சி  அனுபவங்களின் அதிர்வு பொறுத்து.   நிழலின் அருமை  வெயிலின் வேகம் பொறுத்து.  மழையின் அளவு  மேகத்தின் ஓட்டம் பொறுத்து.  புயலின் வேகம்  காற்றின் ஆட்டம் பொறுத்து.  படகின் ஆட்டம்  அலைகளின் அசைவைப் பொறுத்து.   நீல வானில் நிலவின் அழகு  பார்ப்பவர் கண்ணைப் பொறுத்து.  பூக்களின் புனிதம்  பூஜைக்கா பூக்கள் என்பதைப் பொறுத்து.  முகத்தின் அழகு  அகத்தைப் பொறுத்து.  அகத்தின் அழகு  இறைவனின் இசைவைப் பொறுத்து. பக்தி என்பது  தேவையைப் பொறுத்து.  தேவை என்பது...

ஏற்றமும் ...இறக்கமும்.....

Image
                                                                                            மூச்சு முட்ட மேலேறி உச்சம் தொட்டு,  அச்சம் தவிர்த்து, ஓஓ... ஊஊ...எனவே  உற்சாக கூக்குரலுடன்    சர்ரென சறுக்கி   தட்டென தரை தொட்டு  வெற்றிக் களிப்புடனே உச்சம் பார்க்கையில்.....  மீண்டும் மீண்டும்  மூச்சு முட்ட படிகளேறி  உச்சம் தொட்டு,  அச்சம் தவிர்த்து,  சர்ரென சறுக்கி, தட்டென தரை தொட  பிறக்கிறது ஆசை.  ஏற்றமும் இறக்கமும் இன்றி ஏது இல் வாழ்க்கை? ஏற்றமும் இறக்கமும் தானே நல் வாழ்க்கை?  உற்சாக உள்ளத்திற்கு  ஏற்றம் எளிது  இறக்கம் இனிது. உற்சாக உள்ளம் கொள்க.  ஏறி இறங்கி,  ஏறி இறங்கி எனவே  எளிய வாழ்க்கை  இன்பமாய் வாழ்க. ஏற்றத்த...

Integrity.....

Image
                                                                                     "Being good for the sake of being good since it makes you feel good about yourself and let others call you a good person is not really being good. Being really good is not to make you feel good about yourself or others to call you good but just being good no matter what you may think of yourself or others may think of you". If you are always thinking that you are not good enough, then, it means that you are being good.  They say we need to live our life with integrity. In order to understand how to live our life with integrity, we need to first understand what 'integrity' means. Isn't it? Let us do that. According to Merriam-Webster, integrity is a...

என்னை தொலைத்து நான் நீயாக....

Image
                                                                                            இமைகள் தாழ்கையில்  உள்ளே ஊடுருவி  உறைந்து கொள்கிறாய் இதயம் முழுதும். இமைகள் திறக்கையில்  கண்களுக்குள் வந்து  கதகளி செய்கிறாய். பார்ப்பவை என் விழிகளாயினும்  பார்த்தல் நீயே என்பதால்  நீ பார்ப்பது எல்லாம்  அட உன் முகம் தானே. அமைதியான இரவுகளிலும்  என் செவிகளுக்கில்லை ஓய்வு. இசையாக  செவிகளில்  அப்போதும் நீ.  ஆயினும்  நீ கேட்பது எல்லாம்  அட உன் குரல் தானே. நான்... ஆசையே துன்பத்திற்கு காரணம் சொன்ன  புத்தனும் அல்ல;  அனைத்திற்கும் ஆசைப்படு சொன்ன  சத்குருவும் அல்ல;  இருவருக்கும் நடுவே  இருந்து இறந்து போனவன். உள்ளத்தில் ஒளியாக, விழிகளில் வழியாக,...

உரக்க கத்துது கோழி.....

Image
  பெட்டைக் கோழி உரக்க கத்தியது கேட்டு    மோகத்தில் வேகமாய் நெருங்கிய வெட்கங் கெட்ட கொண்டைச் சேவலை வலியின் வெறியோடு  எட்டி உதைத்தது பெட்டைக் கோழி.  பெட்டைக் கோழிகள் எல்லாம்  எட்டி உதைக்கப் பழகி விட்டால்  கொண்டைச் சேவல்கள்  புரிந்து கொள்ளும் உரக்க கத்துதல்  கூடலுக்கு மட்டுமே இல்லை என்பதை.  கொண்டைச் சேவல்களே... உரக்க கத்துது கோழி அதற்கு வலிக்கையில் நெருங்குங்கள்  ஆறுதலோடு.  அது கிரங்கையில் நெருங்குங்கள்  காதலோடு. கொண்டைச் சேவல்களே.... ஒரு உண்மை சொல்கிறேன் கேளுங்கள்: காமம் என்று தனித்தில்லை  காதலின் உச்சம் சிறு காமம். ஆகையால்.... காமம் தவிர்த்து காதல் பெருக்குங்கள்.  இல்லையேல்.... உங்கள் கொண்டை நசுங்க வெறியோடு எட்டி உதைக்கும்  எங்கள் பெட்டைக் கோழிகள்.  நினைவில் இருக்கட்டும்  இவை பெட்டைக் கோழிகள்.  பொட்டைக் கோழிகள் அல்ல.

காலமெல்லாம் காதல் வாழ்க....

Image
  நிலவை இழந்த வானம் இருண்டது மழையை இழந்த மேகம் வெளிர்த்தது உன்னிடத்தில் தன்னை இழந்த என் மனமோ  ஒளிர்ந்தது; சிலிர்த்தது.  இழப்பென்பது இங்கில்லை  பெறுகையில் பிரமிப்பு   கொடுக்கையில் கொண்டாட்டம்  கொடுப்போம்..  கொடுத்தலை கொண்டாடுவோம்.  பெறுவோம்....  பெற்றதை போற்றுவோம். அன்பிற்காக அன்பினால்  உள்ளம் தலைப்படுகையில்  பண்பினால் அது பண்பட்டு  நம்மை கேட்பவர் செவிகளில்  மீட்டும் இனிய சங்கீதம்;  நம்மை பார்ப்பவர் விழிகளில்  விரிக்கும் பரவசப் புல்வெளி.  கொண்டாடி கொடுப்போம்  போற்றிப் பெறுவோம்.  அன்பினால் தலைப்பட்டு,  பண்பினால் பண்பட்டு  இசைப்போம் இனிய சங்கீதம்;  பரப்புவோம் பரவசப் புல்வெளி.  "காலமெல்லாம் காதல் வாழ்க"

டமால் ...டுமீல் ...திடும்....டுடும்

Image
  டமால் ...டுமீல் ...திடும்....டுடும்  வெடிச்சத்தம் வீட்டிற்கு வெளியே  சில்...சில்..சல்...சல்  சந்தோச சங்கீதம் வீட்டினுள்ளே  ஊரெங்கும் திருவிழா  ஆராவாரமாய்  உள்ளுக்குள் அன்புப் பெருவிழா  அமைதியாய்  வெளியே ஓடினேன்  உள்ளம் ஆராவாரமாயிற்று  உள்ளே திரும்பினேன்  உள்ளம் அமைதியாயிற்று  வெளியே ஓடினேன்  ஆராவாரம்  உள்ளே திரும்பினேன்  அமைதி  வெளியே ஓடினேன் உள்ளே திரும்பினேன்  வெளியே ஓடினேன்  உள்ளே திரும்பினேன்  ஆராவாரம்  அமைதி  ஆராவாரம்  அமைதி  கனப்பொழுதில்  தன்னிலை மாற்றிக் கொள்ளும் இந்த வித்தை எப்போது பழகிற்று என் மனம்?   ஆச்சர்யம், ஆனந்தம். டமால் ...டுமீல் ...திடும்....டுடும்  வெடிச்சத்தம் வெளியே;  சில்...சில்..சல்...சல்  சந்தோச சங்கீதம் எனக்குள்ளே.

எங்களின் அன்பு....

Image
  நீல வானை கடந்தன வெள்ளைப் பறவைகள்....  வானம் வெள்ளையானது;  பறவைகள் நீலமாயின.  மழை பொழிந்தது....  மண் மகிழ்ந்தது  ஆனால் வானம் வறண்டது  மழை மேகங்கள் இல்லாது. உன்னை நான் கடந்தேன்.......  என் நேசம் உன்னிடத்தில்  உன் சுவாசம் என்னிடத்தில்.  ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டுமாம் உன் அன்பை பொழிந்தாய் என் மீது  என் உள்ளம் நெகிழ்ந்தது,  உன் உள்ளம் மகிழ்ந்தது.  இழப்பில்லை இங்கே எவருக்கும்.  இந்த விந்தை எப்போதும் நிகழ்வதெப்படி? அன்பு.... எத்தனை கொடுத்தாலும் குறைவதில்லை  எத்தனை பெற்றாலும் நிறைவதில்லை  வெள்ளையாய் மாறும் நீலவானில்லை  நீலமாய் மாறும் வெள்ளைப் பறவையில்லை. என்னை இழந்து நான் அவளைப் பெறுவதில்லை  தன்னை இழந்து அவள் என்னைப் பெறுவதில்லை  நான் நானாக என் போக்கில்  அவளை என் அறிவிலும் உணர்விலும் சுமந்து.  அவள் அவளாக  என்னை தன் உயிரில் சுமந்து. என்னை நான் இழக்காத;  அவளை அவள் இழக்காத;  அற்புதம் எங்களின் எங்கள் மீதான அன்பு.  இறுமாப்பில்  நிமிர்ந்து மட்டுமே நிற்பதில்லை நாங்கள்...

சுப்ரபாதம் ......

Image
  வண்ண மலர்களை கொண்டு  நித்தமும் சுப்ரபாதம் சொல்லும்  சூப்பர் பரதம் நீ  உன் சொல்லிலும், செயலிலும்  எத்தனை நளினம்  எத்தனை நயனம்  பரதம் புரிகிறதோ இல்லையோ  உன் சொல்லும் செயலும்  நீ சொல்வதை விடவும்  நீ செய்வதை விடவும்  தெளிவாகவே புரிகிறது  நீ சொல்வதும் செய்வதும்  உனக்கே புரிந்ததை விடவும்  நீ யோசிப்பதை நான் நேசிக்கிறேன்  நீ நேசிப்பதை நான் யோசிக்கிறேன்  அடுத்த கட்டம் நகர எனக்கு எண்ணமும் இல்லை  எண்ணமில்லாததால் எந்த அவசரமும் இல்லை  நிகழ்த்துவது நானென்றால்தானே  அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்த  ஆர்வம் இருக்கும் எனக்கு  நடப்பது நடக்கட்டும் கிடைப்பது கிடைக்கட்டும்  நான் ரொம்ப தெளிஞ்சவன்டா  இருக்குற வரையிலும் எது வந்த போதிலும்  ஏத்துக்க தெரிஞ்சவன்டா