Posts

Image
                                                                                       The most pressing question in few of us. Am I the body? Is there a mind? What is soul? Am I the body, mind and the soul? These are the questions asked by a few millions among the trillions around this planet earth. The answer is simple:  THERE IS NO 'I'. We do not exist outside the universe. Since we do not exist outside the universe, all that is existing is ONLY THE UNIVERSE.  In that case, what are soul, mind & body?  <<<< To be continued >>>>

மனிதர் புரிந்து கொள்ள.....

Image
                                                                        நீல வானை கடந்தன வெள்ளைப் பறவைகள்....  வானம் வெள்ளையானது, பறவைகள் நீலமாயின.  மழை பொழிந்தது..... மண் மகிழ்ந்தது,  வானம் வறண்டது. என்னவளை நான் கடந்தேன்.......  என் நேசம் அவளிடத்தில்,  அவள் சுவாசம் என்னிடத்தில்.  அவள் அன்பை பொழிந்தாள் என் மீது....  என் உள்ளம் நெகிழ்ந்தது,  அவள் உள்ளம் மகிழ்ந்தது.  ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டுமாம் இழப்பில்லை இங்கே எவருக்கும்.  இந்த விந்தை எப்போதும் நிகழ்வதெப்படி? எங்கள் அன்பு.... எத்தனை கொடுத்தாலும் குறைவதில்லை  எத்தனை பெற்றாலும் நிறைவதில்லை  வெள்ளையாய் மாறும் நீலவானில்லை  நீலமாய் மாறும் வெள்ளைப் பறவையில்லை. என்னை இழந்து நான் அவளைப் பெறுவதில்லை  தன்னை இழந்து அவள் என்னைப் பெறுவதில்லை  நான் நானாக என் போ...

விபரீத விளையாட்டு

Image
                                                                   ஒரு இதழ் சிப்பியிலிருந்து உதிர்ந்தன மூன்று வார்த்தை முத்துக்கள்   நான் திகைத்துப் பார்த்தேன் அவள் நகைத்துச் சென்றாள் என் வாழ்க்கையோடு ஒரு பெண்ணின் விபரீத விளையாட்டு மீண்டும்.

சஹாரா பூக்கள் பூத்ததோ....

Image
  உச்சத்தில் சூரியன் உக்கிரமாய். எப்போதும் பூக்கும்  வேர்வைத் துளிகளின் இடத்தில்  இப்போது பூக்களாய் பனித்துளிகள். காதை கொடு  கிசுகிசுக்கிறேன் காரணத்தை. உன் செவிகளின் அழகில்  என் இதழ்கள் இறக்காமல் இருக்குமானால்.   நேற்றைக்கு .... என் செல்லமே என நீ என்னை விழித்ததாய் ஓர் உணர்வு ஒரு வேளை அது என் கற்பனையோ என கடந்தேன் தளர்வுடன் இன்று .... அன்பில் துடிக்கும் உன் அழகு இதயம் என் கண்களில் வந்து போனது " கண்டது நிஜம்தானா ? சஹாரா பூக்கள் பூத்ததோ ?" என வியந்தேன் நான் தவிக்கிறேன், துடிக்கிறேன். எப்படி அறிவேன் நிஜம்தான் இது என்று? இங்கு... உச்சத்தில் சூரியன் உக்கிரமாய். உடலுக்கு வெளியே சஹாரா, உள்ளத்தினுள்ளோ அண்டார்டிகா.  இருபது வயது பையனின் இதயம் போல இந்த   வயதிலும்  பட படக்கிறது  இந்த அரைக்கிழவனின் அழகு இதயம். என் இதயம் அழகு என்பதை அறிவேன்  நீயே அழகாய் அதை அலங்கரிப்பதால்.   கண்களில் இருக்கலாம் கோளாறு  உன்னை அவை பார்ப்பதில்லையே! ஆனால்... உன்னை சுமக்கும் என் உள்ளத்தில் ஏனிந்த பேஜாரு?! உன்னிடத்திலோ...

தென்றல் வந்து தீண்டும் போது .....

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றான இந்த " தென்றல் வந்து தீண்டும் போது " பாடலின் சரணங்களை எனக்கு மேலும் பிடித்த வகையில் மாற்றி எழுதி பார்த்ததில் ..... M: உன்னை நானும் பார்த்ததாலே  என்ன வண்ணமோ மனசுல  என்னை நீயும் பார்த்ததாலே  என்ன வண்ணமோ நினைப்புல  நித்தம் நித்தம் கேக்குதம்மா  நெஞ்சினிலே உன் சத்தம்மம்மா  உன் சத்தத்துக்கு ஏத்தபடி  என் எண்ணமெல்லாம் மாறுமம்மா  மென்மையம்மா உன் உள்ளத்த நானும் கண்டேன்  கண்ணம்மா நீ என் செல்ல பெண்ணே  உன்னை நானும் பார்த்ததாலே  என்ன வண்ணமோ மனசுல  என்னை நீயும் பார்த்ததாலே  என்ன வண்ணமோ நினைப்புல  F:  ஏனென்று தெரியாமலே  என் மனசும் மயங்குது  நம் உறவு புரியாமலே  என் உசுரும் உருகுது 

ஆடம் ஆப்பிளும் ....ஆலகால விஷமும்

Image
                                                                                            அவனுக்குத் தெரியாதா  ஆலகால விஷம் அவளென்றே இருந்தும் ஏன் விழுங்கினான்  அலறிப் புடைத்து ஓடி வந்து  சங்கைப் பிடிப்பாள்  விழுங்கிய நஞ்சு  இரைப்பைக்குள் வீழாமல்  தொண்டைக் குழியில்  காலத்திற்கும் சுற்றித் திரியட்டும்  என்கிற திட்டமோ  அப்பாவி குரல் பெட்டி  அவன் விட்ட கதையில்  ஆடம் ஆப்பிள் ஆனது  இவன் விட்ட கதையில்  ஆலகால விஷம் ஆனது  ஆணின் குரலாக பெண்  அவனுக்கு ஆடம் ஆப்பிள்  பெண்ணின் குரலாக ஆண்  அவளுக்கு ஆலகால விஷம்  என்று எப்போதடா  புதுக்கதை விடப் போகிறீர்கள்?  எக்கேடோ கெட்டுத் தொலையுங்கள்  நீங்கள்.  பக்கோடா சாப்பிட பறந்த...

வாழ வைக்கும் காதலுக்கு ஜே.....

Image
                                                                                        விடாது கொட்டிய மழையில்  கட்டாந்தரை களிமண் பூமி  களகளத்து கொழ கொழ சகதியானது.  வீட்டில் வேண்டுமளவும் வெங்காயம் இருக்க  இன்னும் கொஞ்சம் வாங்கிவரச் சொல்லி  எதற்காக இந்த வெங்காயத்தை  விரட்டி அடிக்கிறாள்  என் காதல் மனைவி?  வியப்போடு வெளியேறினேன் வெள்ளை வேட்டியும் சட்டையுமாய்.  கொழ கொழ சகதிகளுக்கு நடுவே  நடை பயணம் நகைச்சுவை ஆனது.  வித்தைக்காரன் போல் தத்தித்தாவி  கடைவீதி சென்று திரும்பியாயிற்று  கஷ்டப்பட்டு.  வெற்றிக் களிப்புடன்  திரும்பி வந்தவனை  விரக்தியோடு பார்க்கிறாள் விஷமக்கார வாழ்க்கைத் துணைவி.    வீட்டில் வேண்டுமளவும் இருக்க  மேலும் வாங்கிவரச் சொல்...