உச்சத்தில் சூரியன் உக்கிரமாய். எப்போதும் பூக்கும் வேர்வைத் துளிகளின் இடத்தில் இப்போது பூக்களாய் பனித்துளிகள். காதை கொடு கிசுகிசுக்கிறேன் காரணத்தை. உன் செவிகளின் அழகில் என் இதழ்கள் இறக்காமல் இருக்குமானால். நேத்தைக்கு 'செல்லோ'... சரி...தட்டச்சு தவறாக இருக்கலாம் என கடந்தேன் தளர்வுடன். இன்றைக்கு அன்பில் துடிக்கும் உன் அழகு இதயம்... பார்த்ததும் கேட்டது பாடல்: "சஹாரா பூக்கள் பூத்ததோ?" காண்பது நிஜம்தானா? தட்டச்சு தவறு என்பது போல, கண்களை சோதிக்க வேண்டுமென கடந்து போக முடியவில்லை இதையும். தவிக்கிறேன், துடிக்கிறேன். எப்படி அறிவேன் நிஜம்தான் இது என்று? இங்கு... உச்சத்தில் சூரியன் உக்கிரமாய். உடலுக்கு வெளியே சஹாரா, உள்ளத்தினுள்ளோ அண்டார்டிகா. இருபது வயது பையனின் இதயம் போல ஐம்பது வயதில் பட படக்கிறது அரைக்கிழவனின் அழகு இதயம். என் இதயம் அழகு என்பதை அறிவேன் நீயே அழகாய் அதை அலங்கரிப்பதால். கண்களில் இருக்கலாம் கோளாறு உன்னை அவை பார்ப்பதில்லையே! ஆனால்... உன்னை சுமக்கும் என் உள்ளத்தில் ஏனிந்த ப...
"கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான் மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்க பார்க்கின்றேன் ஆனால்....... கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே" விண்ணையும் மண்ணையும் ரசிப்பவன் தன்னையும் பெண்ணையும் ரசிக்க மறப்பதில்லை மறுப்பதும் இல்லை விண்ணையும் மண்ணையும், தன்னையும் பெண்ணையும் ரசிக்கையில் மிருகம் கொன்று கடவுள் வளர்க்கின்றான் புல்லையும் பூவையும் நேசிப்பவன் தன்னையும் பெண்ணையும் நேசித்து நெகிழ்கிறான் நேசித்து நெகிழ்கையில் மிருகம் கொன்று உணவாய் தின்று கடவுள் வளர்த்து வாழ்க வாழ்கவென வாழ்கின்றான் அடங்கா திமிர் தெறிக்கும் ஆணவ த் தோள்கள் கொண்டவன் அடங்கா அன்பு தெறிக்கும் பெண்ணவளின் பட்டுத் தோள்களில் முகம் புதைக்கையில் அடங்கா ஆணவம் தொலைத்து அன்பு வளர்க்கின்றான் மின்னலென மின்னும் அவள் மென் விழிகளில் தன் முகமும் அகமு...
"இது ஒரு பொன் மாலை பொழுது வானமகள் நானுகிறாள் வேறு உடை பூணுகிறாள்" மாலை எனும் மன்னன் தொட்டான் வானமெனும் மங்கையவள் மஞ்சள் முகம் நாணத்தில் பூசியது சிவப்பு நிறம் மேகமெனும் ஆடை மெல்லக் களைந்தாள் வெள்ளுடல் சிலிர்த்து வெட்கம் பூசியது மஞ்சளோடு பொன் வண்ணம். வானச்சுவற்றின் மீதிலே இறைவனின் மந்திரத் தூரிகை மாலையில் தீட்டிய இவ்ஓவியம் பார்த்த என் கண்களில் பல கோடி மின்னல்கள் துவண்டிருந்த என் நெஞ்சிலே உற்சாகத் துள்ளல்கள். அகம் மயக்கும் இது போல மாலையும் உளம் கிறக்கும் அதிகாலை வேலையும் அவன் (இறைவன்) இருப்பிற்கு அத்தாட்சி இவ்வுண்மை உலகிற்கு இன்று நான் உரைத்தமைக்கு என் ஆத்தா நீயே சாட்சி.
Comments
Post a Comment