உச்சத்தில் சூரியன் உக்கிரமாய். எப்போதும் பூக்கும் வேர்வைத் துளிகளின் இடத்தில் இப்போது பூக்களாய் பனித்துளிகள். காதை கொடு கிசுகிசுக்கிறேன் காரணத்தை. உன் செவிகளின் அழகில் என் இதழ்கள் இறக்காமல் இருக்குமானால். நேற்றைக்கு .... என் செல்லமே என நீ என்னை விழித்ததாய் ஓர் உணர்வு ஒரு வேளை அது என் கற்பனையோ என கடந்தேன் தளர்வுடன் இன்று .... அன்பில் துடிக்கும் உன் அழகு இதயம் என் கண்களில் வந்து போனது " கண்டது நிஜம்தானா ? சஹாரா பூக்கள் பூத்ததோ ?" என வியந்தேன் நான் தவிக்கிறேன், துடிக்கிறேன். எப்படி அறிவேன் நிஜம்தான் இது என்று? இங்கு... உச்சத்தில் சூரியன் உக்கிரமாய். உடலுக்கு வெளியே சஹாரா, உள்ளத்தினுள்ளோ அண்டார்டிகா. இருபது வயது பையனின் இதயம் போல இந்த வயதிலும் பட படக்கிறது இந்த அரைக்கிழவனின் அழகு இதயம். என் இதயம் அழகு என்பதை அறிவேன் நீயே அழகாய் அதை அலங்கரிப்பதால். கண்களில் இருக்கலாம் கோளாறு உன்னை அவை பார்ப்பதில்லையே! ஆனால்... உன்னை சுமக்கும் என் உள்ளத்தில் ஏனிந்த பேஜாரு?! உன்னிடத்திலோ...
நீல வானை கடந்தன வெள்ளைப் பறவைகள்.... வானம் வெள்ளையானது, பறவைகள் நீலமாயின. மழை பொழிந்தது..... மண் மகிழ்ந்தது, வானம் வறண்டது. என்னவளை நான் கடந்தேன்....... என் நேசம் அவளிடத்தில், அவள் சுவாசம் என்னிடத்தில். அவள் அன்பை பொழிந்தாள் என் மீது.... என் உள்ளம் நெகிழ்ந்தது, அவள் உள்ளம் மகிழ்ந்தது. ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டுமாம் இழப்பில்லை இங்கே எவருக்கும். இந்த விந்தை எப்போதும் நிகழ்வதெப்படி? எங்கள் அன்பு.... எத்தனை கொடுத்தாலும் குறைவதில்லை எத்தனை பெற்றாலும் நிறைவதில்லை வெள்ளையாய் மாறும் நீலவானில்லை நீலமாய் மாறும் வெள்ளைப் பறவையில்லை. என்னை இழந்து நான் அவளைப் பெறுவதில்லை தன்னை இழந்து அவள் என்னைப் பெறுவதில்லை நான் நானாக என் போ...
பக்கத்து வீட்டுக்காரர் தன் அன்பு மனைவி திடீர் மாரடைப்பில் காலமாகிப் போனதாய் கலங்கிய கண்களுடன் சேதி சொல்லிப் போனார் . அதிர்ந்து போனாள் என் அன்பு மனைவி எதை நினைத்து அதிர்ந்தாளோ? மூக்குக் கண்ணாடியை இழுத்து விட்டுக் கொண்ட எழுபது வயது என் ஆரோக்கிய தாய் "புண்ணியவதி போய் சேர்ந்து விட்டாள்" என்று கூறி மௌனமானாள். முப்பத்தி ஐந்து வயதில் மரணித்த அவள் புண்ணியவதி என்றால் எழுபது வயதில் என் தாயும் ஐம்பது வயதில் நானும் இன்னமும் புண்ணியம் ஏதும் செய்யவில்லையோ? புத்தியில் எழுந்த கேள்வி கீழிறங்கி இதயத்தை தாக்க பக்கத்துக்கு வீட்டு புண்ணியவதி அம்மாவிற்காய் ஆனந்தப் படுவதா என் வீட்டு அம்மாவிற்கும் எனக்குமாய் வருத்தப் படுவதா என்கிற குழப்பத்தில் நானும் அதிர்ந்து அனைந்தேன். "ஐயோ ....என்னங்க..." என்கிற என் மனைவியின் அலறல் என் உயிருக்கு கேட்டது உடலுக்கு கேட்கவில்லை.
Comments
Post a Comment