இயல் இசை நாடகம் என கலைகள் பல விதம். கலைகளின் ரசிகர்கள் பல விதம் அதில் நான் ஒரு விதம். ரசிகர்களின் ரசனைகள் பல விதம் அதில் எனது புது விதம். நீ பார்ப்பவை எல்லாம் படங்கள் அல்ல விழிகள் சொல்கின்றன. படங்களில் என்ன படிப்பது பாடமா? படிப்பினை இல்லாத படங்கள் வெறும் வண்ணக் கலவையா? வெறும் வண்ணக் கலவைக்கும் என்னுள்ளம் உருகுவதேனோ? நீ கேட்பவை எல்லாம் பாடல்கள் அல்ல செவிகள் சொல்கின்றன. பாடல்களில் என்ன பார்ப்பது நுட்பமா? நுட்பங்கள் இல்லாத பாடல்கள் வெறும் ஓசைக் குலவியா? வெறும் ஓசைக் குலவியிலும் என்னுள்ளம் ஒன்றிக் குவிவது ஏனோ? ரசிகர்கள் பல விதம் நான் ஒரு விதம். ரசனைகள்...
விடாது கொட்டிய மழையில் கட்டாந்தரை களிமண் பூமி களகளத்து கொழ கொழ சகதியானது. வீட்டில் வேண்டுமளவும் வெங்காயம் இருக்க இன்னும் கொஞ்சம் வாங்கிவரச் சொல்லி எதற்காக இந்த வெங்காயத்தை விரட்டி அடிக்கிறாள் என் காதல் மனைவி? வியப்போடு வெளியேறினேன் வெள்ளை வேட்டியும் சட்டையுமாய். கொழ கொழ சகதிகளுக்கு நடுவே நடை பயணம் நகைச்சுவை ஆனது. வித்தைக்காரன் போல் தத்தித்தாவி கடைவீதி சென்று திரும்பியாயிற்று கஷ்டப்பட்டு. வெற்றிக் களிப்புடன் திரும்பி வந்தவனை விரக்தியோடு பார்க்கிறாள் விஷமக்கார வாழ்க்கைத் துணைவி. வீட்டில் வேண்டுமளவும் இருக்க மேலும் வாங்கிவரச் சொல்...
Comments
Post a Comment