நீல வானை கடந்தன வெள்ளைப் பறவைகள்.... வானம் வெள்ளையானது, பறவைகள் நீலமாயின. மழை பொழிந்தது..... மண் மகிழ்ந்தது, வானம் வறண்டது. என்னவளை நான் கடந்தேன்....... என் நேசம் அவளிடத்தில், அவள் சுவாசம் என்னிடத்தில். அவள் அன்பை பொழிந்தாள் என் மீது.... என் உள்ளம் நெகிழ்ந்தது, அவள் உள்ளம் மகிழ்ந்தது. ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டுமாம் இழப்பில்லை இங்கே எவருக்கும். இந்த விந்தை எப்போதும் நிகழ்வதெப்படி? எங்கள் அன்பு.... எத்தனை கொடுத்தாலும் குறைவதில்லை எத்தனை பெற்றாலும் நிறைவதில்லை வெள்ளையாய் மாறும் நீலவானில்லை நீலமாய் மாறும் வெள்ளைப் பறவையில்லை. என்னை இழந்து நான் அவளைப் பெறுவதில்லை தன்னை இழந்து அவள் என்னைப் பெறுவதில்லை நான் நானாக என் போ...
உடல் முதிர்ச்சி உண்பதின் ஊட்டம் பொறுத்து. அறிவு முதிர்ச்சி தேடலின் ஆழம் பொறுத்து. மன முதிர்ச்சி அனுபவங்களின் அதிர்வு பொறுத்து. நிழலின் அருமை வெயிலின் வேகம் பொறுத்து. மழையின் அளவு மேகத்தின் ஓட்டம் பொறுத்து. புயலின் வேகம் காற்றின் ஆட்டம் பொறுத்து. படகின் ஆட்டம் அலைகளின் அசைவைப் பொறுத்து. நீல வானில் நிலவின் அழகு பார்ப்பவர் கண்ணைப் பொறுத்து. பூக்களின் புனிதம் பூஜைக்கா பூக்கள் என்பதைப் பொறுத்து. முகத்தின் அழகு அகத்தைப் பொறுத்து. அகத்தின் அழகு இறைவனின் இசைவைப் பொறுத்து. பக்தி என்பது தேவையைப் பொறுத்து. தேவை என்பது...
Comments
Post a Comment