உச்சத்தில் சூரியன் உக்கிரமாய். எப்போதும் பூக்கும் வேர்வைத் துளிகளின் இடத்தில் இப்போது பூக்களாய் பனித்துளிகள். காதை கொடு கிசுகிசுக்கிறேன் காரணத்தை. உன் செவிகளின் அழகில் என் இதழ்கள் இறக்காமல் இருக்குமானால். நேத்தைக்கு 'செல்லோ'... சரி...தட்டச்சு தவறாக இருக்கலாம் என கடந்தேன் தளர்வுடன். இன்றைக்கு அன்பில் துடிக்கும் உன் அழகு இதயம்... பார்த்ததும் கேட்டது பாடல்: "சஹாரா பூக்கள் பூத்ததோ?" காண்பது நிஜம்தானா? தட்டச்சு தவறு என்பது போல, கண்களை சோதிக்க வேண்டுமென கடந்து போக முடியவில்லை இதையும். தவிக்கிறேன், துடிக்கிறேன். எப்படி அறிவேன் நிஜம்தான் இது என்று? இங்கு... உச்சத்தில் சூரியன் உக்கிரமாய். உடலுக்கு வெளியே சஹாரா, உள்ளத்தினுள்ளோ அண்டார்டிகா. இருபது வயது பையனின் இதயம் போல ஐம்பது வயதில் பட படக்கிறது அரைக்கிழவனின் அழகு இதயம். என் இதயம் அழகு என்பதை அறிவேன் நீயே அழகாய் அதை அலங்கரிப்பதால். கண்களில் இருக்கலாம் கோளாறு உன்னை அவை பார்ப்பதில்லையே! ஆனால்... உன்னை சுமக்கும் என் உள்ளத்தில் ஏனிந்த ப...
பக்கத்து வீட்டுக்காரர் தன் அன்பு மனைவி திடீர் மாரடைப்பில் காலமாகிப் போனதாய் கலங்கிய கண்களுடன் சேதி சொல்லிப் போனார் . அதிர்ந்து போனாள் என் அன்பு மனைவி எதை நினைத்து அதிர்ந்தாளோ? மூக்குக் கண்ணாடியை இழுத்து விட்டுக் கொண்ட எழுபது வயது என் ஆரோக்கிய தாய் "புண்ணியவதி போய் சேர்ந்து விட்டாள்" என்று கூறி மௌனமானாள். முப்பத்தி ஐந்து வயதில் மரணித்த அவள் புண்ணியவதி என்றால் எழுபது வயதில் என் தாயும் ஐம்பது வயதில் நானும் இன்னமும் புண்ணியம் ஏதும் செய்யவில்லையோ? புத்தியில் எழுந்த கேள்வி கீழிறங்கி இதயத்தை தாக்க பக்கத்துக்கு வீட்டு புண்ணியவதி அம்மாவிற்காய் ஆனந்தப் படுவதா என் வீட்டு அம்மாவிற்கும் எனக்குமாய் வருத்தப் படுவதா என்கிற குழப்பத்தில் நானும் அதிர்ந்து அனைந்தேன். "ஐயோ ....என்னங்க..." என்கிற என் மனைவியின் அலறல் என் உயிருக்கு கேட்டது உடலுக்கு கேட்கவில்லை.
" நான் யாரென்று எனக்கே தெரியாது" என்று ஓஷோ சொல்வதை எப்படி நடைமுறைப் படுத்துவது என்று நான் கேட்கப்பட்டேன். ஓஷோ சொல்வதை நடைமுறை படுத்துவதற்கு முன்னால் ஓஷோ ஏன் இப்படிச் சொல்கிறார் என்று புரிதல் முக்கியம் அல்லவா ? நான் புரிந்து கொண்டதை இங்கே சொல்கிறேன்..... நான் என்று தனித்தில்லை என்பதால் ; இல்லாத ஒன்றை இதுதான் நான் என்று எப்படிச் சொல்வது என்பதால் "நான் யாரென்று எனக்கே தெரியாது" என்று ஓஷோ சொல்லி இருக்கலாம். இது தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம்தானே தவிர அது நடைமுறைப்படுத்த வேண்டிய விசயமில்லை. அவர் இப்படிச் சொன்னதற்கு வேறு காரணமும் இருக்கக் கூடும். ஏன் , எப்படி என்கிற காரணத்தை இறுதியில் சொல்கிறேன். இருப்பினும் நீங்கள் நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும் என்று விரும்பினால் அதைச் செய்வதற்கு நீங்கள் யாரென்பதை உணர்ந்து , நான் என்கிற எண்ணத்தை விட்டொழிப்பதே ஒரே வழி. நீங்கள் யாரென்பதை உணர்ந்து , நான் என்கிற எண்ணத்தை விட்டொழித்து விட்டால் அதன் பிறகு "நான் யார் என்று எனக்கே தெரியவில்லை" என்று கூட சொல்ல முடியாமல் போய்விடும். நீங்கள் யார் என்பதை உலகம் சொல்லும். அப்படி...
Comments
Post a Comment