நீல வானை கடந்தன வெள்ளைப் பறவைகள்.... வானம் வெள்ளையானது, பறவைகள் நீலமாயின. மழை பொழிந்தது..... மண் மகிழ்ந்தது, வானம் வறண்டது. என்னவளை நான் கடந்தேன்....... என் நேசம் அவளிடத்தில், அவள் சுவாசம் என்னிடத்தில். அவள் அன்பை பொழிந்தாள் என் மீது.... என் உள்ளம் நெகிழ்ந்தது, அவள் உள்ளம் மகிழ்ந்தது. ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டுமாம் இழப்பில்லை இங்கே எவருக்கும். இந்த விந்தை எப்போதும் நிகழ்வதெப்படி? எங்கள் அன்பு.... எத்தனை கொடுத்தாலும் குறைவதில்லை எத்தனை பெற்றாலும் நிறைவதில்லை வெள்ளையாய் மாறும் நீலவானில்லை நீலமாய் மாறும் வெள்ளைப் பறவையில்லை. என்னை இழந்து நான் அவளைப் பெறுவதில்லை தன்னை இழந்து அவள் என்னைப் பெறுவதில்லை நான் நானாக என் போ...
தத்தி தத்தி தவழ்ந்தே வந்து மொட்டு மொட்டு பவழ வாய் திறந்தே திக்கி திக்கி திகட்டா இனிமையில் மழழை பேசி பட்டு பட்டு உன் மென் விரல்களால் என்னை தொட்டு தொட்டு சட்டு சட்டென என் சோர்வனைத்தும் போக்கி அள்ளி அள்ளி உன்னை நான் அணைக்கையிலும் நான் கிள்ளி கிள்ளி உன் கன்னம் சிவக்கையிலும் துள்ளி துள்ளி என்னை சுற்றி பட்டாம் பூச்சியாய் நீ பறக்கையிலும் பூ பூவாய் நான் மலர்வேன் என்னையும் என்னிலிருந்து உன்னையும் படைத்தவனின் பாதங்கள் மனதால் நான் படிவேன் "பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு"
படைத்தல் நிகழ்த்த இரண்டு நிமிட கலவியில் இலகுவாய் ஆணும் பெண்ணும் இணைகின்றோம். படைப்பவன் ஆண்டவன் ஆயினும் படைப்பிப்பவள் மருத்துவச்சி அல்லவா? அன்மையில் இருக்கும் அன்பான மருத்துவச்சி இவளை ஏன் மறக்கின்றோம்? எங்கோ இருக்கும் ஆண்டவன் தேடி அங்குமிங்கும் ஏன் அலைகின்றோம்? பத்து பத்து மாசங்கள் தாய்மை சுமப்பதை பல மணி நேரம் போராடி பூமிக்கு புது புது பூக்களாய் அவள் கொண்டு வருவதை பத்திரமாய் அவள் பாதுகாப்பில் பத்து நாட்கள் விட்டுவிட்டு உறவினர் படை சூழ ஊருக்கு போகையில் பூவினை பூக்கச் செய்தவளுக்கு முறையான மரியாதை செய்ய மறந்தே போகிறோம் பில்லை குறைக்க சண்டை செய்ய மறப்பதில்லை. வாதம் தவிர்த்து இழிவை மறந்து தான் புதிதாய் பிறப்பித்த பூவினை விழி விரிய ஒரு முறை அன்பாய் பார்த்துவிட்டு அடுத்த பூவினை அழகாய் படைக்க அரக்க பறக்க ஓடுகிறாள் வெள்ளை கோட்டில் வண்ண தேவதை. பொன்னான ஒரு மாலைப் பொழு...
Comments
Post a Comment