Posts

Showing posts from November, 2021

ஆடம் ஆப்பிளும் ....ஆலகால விஷமும்

Image
                                                                                            அவனுக்குத் தெரியாதா  ஆலகால விஷம் அவளென்றே இருந்தும் ஏன் விழுங்கினான்  அலறிப் புடைத்து ஓடி வந்து  சங்கைப் பிடிப்பாள்  விழுங்கிய நஞ்சு  இரைப்பைக்குள் வீழாமல்  தொண்டைக் குழியில்  காலத்திற்கும் சுற்றித் திரியட்டும்  என்கிற திட்டமோ  அப்பாவி குரல் பெட்டி  அவன் விட்ட கதையில்  ஆடம் ஆப்பிள் ஆனது  இவன் விட்ட கதையில்  ஆலகால விஷம் ஆனது  ஆணின் குரலாக பெண்  அவனுக்கு ஆடம் ஆப்பிள்  பெண்ணின் குரலாக ஆண்  அவளுக்கு ஆலகால விஷம்  என்று எப்போதடா  புதுக்கதை விடப் போகிறீர்கள்?  எக்கேடோ கெட்டுத் தொலையுங்கள்  நீங்கள்.  பக்கோடா சாப்பிட பறந்து போகிறேன் நான். 

வாழ வைக்கும் காதலுக்கு ஜே.....

Image
                                                                                        விடாது கொட்டிய மழையில்  கட்டாந்தரை களிமண் பூமி  களகளத்து கொழ கொழ சகதியானது.  வீட்டில் வேண்டுமளவும் வெங்காயம் இருக்க  இன்னும் கொஞ்சம் வாங்கிவரச் சொல்லி  எதற்காக இந்த வெங்காயத்தை  விரட்டி அடிக்கிறாள்  என் காதல் மனைவி?  வியப்போடு வெளியேறினேன் வெள்ளை வேட்டியும் சட்டையுமாய்.  கொழ கொழ சகதிகளுக்கு நடுவே  நடை பயணம் நகைச்சுவை ஆனது.  வித்தைக்காரன் போல் தத்தித்தாவி  கடைவீதி சென்று திரும்பியாயிற்று  கஷ்டப்பட்டு.  வெற்றிக் களிப்புடன்  திரும்பி வந்தவனை  விரக்தியோடு பார்க்கிறாள் விஷமக்கார வாழ்க்கைத் துணைவி.    வீட்டில் வேண்டுமளவும் இருக்க  மேலும் வாங்கிவரச் சொல்லி  எதற்காக விரட்டி அடித்தாளோ  என் காதல் மனைவி? அப்போது புரியாதது  இப்போது புரிகிறது. வெளியே.... ஊரே வெள்ளத்தில் அல்லாடிக் கொண்டிருக்க  உள்ளே.... அவள் அடுக்களையில் அல்லாடிக் கொண்டிருக்க,   கொஞ்சமும் வெட்கமின்றி  கொதிநீர் கேட்டு வாங்கி  கூல் ஆக குளித்து முடித்து  அயர்ன் செய்த வேட்டி சட்டை அணிந்து  நடு கூடத்தில் நச்சென வந்தமர்ந்து  சூடாக ஒரு காப்பி கேட்ட கோபத

விடுகதையோ இந்த வாழ்க்கை ........?

Image
                                                                                  வினாவுக்கான விடையாக  விடுகதையே வாழ்க்கை எனில்  விடையில்லா விடுகதை ஏது? விடுகதையே வாழ்க்கை எனில் வாழ்க்கையின் விடை எது?  எவனோ விடுகதை விடுப்பவன் ? ஏனோ அவன் அதை விடுப்பது? இந்தக் கேள்வியும் எந்தக் கேள்வியும்  இல்லாத வாழ்க்கை கேலி. இந்தக் கேள்வியும் இன்னும் கேள்விகளுமென  இருக்கும் வாழ்க்கை மலர் வேலி. இந்தக் கேள்விக்கும் எந்தக் கேள்விக்குமான  பதில்கள் உங்கள் பக்கத்தில்.  தட்டுங்கள் திறக்கப்படும்,  கேளுங்கள் கொடுக்கப்படும்.  எவனோ விடுகதை விடுப்பவன் ? விடுப்பவன் இறைவன். ஏனோ அவன் அதை விடுப்பது ?  விடுப்பது விடை தரவே. இப்படி..... இந்தக் கேள்விக்கும் எந்தக் கேள்விக்குமான  விடை தெரிந்தவன் வாழ்க்கைப் பாதையில்  எப்போதும் விடியலின் வெளிச்சம். ஆஹா ... தெள்ளத் தெளிவான வாழ்க்கைப் பயணம்  அவனுக்குத் தான் எத்தனை சுகம்.  இந்தக் கேள்விக்கும் எந்தக் கேள்விக்குமான விடை தெரியாதவன் வாழ்க்கைப் பாதையில்  என்றென்றும் அஸ்தமனத்தின் கும்மிருட்டு. அய்யோ .... தட்டுத் தடுமாறும் வாழ்க்கைப் பயணம்  அவனுக்குத் தான் எத்தனை அச்சம்.  சுகமிருக்க

மாக்களாய் மக்கள்....

Image
                                                                                                 கேட்கிறீர் நீவீர் இரவில் விழிப்பு  பகலில் உறக்கம் ஏன் எனவே. உண்மைகளை  இலட்சம் இலட்சமாய்  கொட்டிக் கொடுக்குது இரவு,  பகல் பொழுது தருவதில்லை  பத்து பைசா எனக்கு என்கிறேன் நான். "ஐயனே தவிர 'ஐ' என்றில்லை என்கிற உண்மை அறிந்து கொள்ள  உதவும் கரை இரவு; இவ்வுண்மை உணராதவரை  உதவா கரை பார் போற்றும் பகல்.  சிந்திக்கத் துணிவீரோ நீவீர்?" - உண்மை சொல்லி  உரக்க கேட்கிறான் நம் இறைவன். ஊர் உறங்கையில் விழிப்பும்  ஊர் விழிக்கையில் உறக்கமும்  இயற்கை குறித்த வெறுப்பில் விளைந்தது அல்ல. இயல்பான சிந்தனை வறண்டு மாக்களாய் போன என் மக்கள் குறித்த வேதனையில் மலர்ந்தது அது.  முன் தூங்கி முன் எழாமல்  பின் தூங்கி பின் விழித்தல்  முரண் என முனகுகின்றீர்.   முரணல்ல அது அரண் என்றறிவீரோ? ஊரோடு ஒத்து வாழ் என்கிறீர்.  வெற்று ஊரோடு ஒத்து வாழ்வதெப்படி? வெற்று ஊரா என வியக்கிறீர்.  மந்தை மந்தையாய் மாக்களை மக்கள் என்கிறீரா? மக்கள் மாக்களா என விளிக்கிறீர்.  சிந்திக்க மறுக்கும் மக்களை மாக்கள் என நானா சொன்னேன்? சிந்திப்பதா

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

Image
                                                                                  இயல் இசை நாடகம் என  கலைகள் பல விதம்.  கலைகளின் ரசிகர்கள் பல விதம்  அதில் நான் ஒரு விதம்.  ரசிகர்களின் ரசனைகள் பல விதம்  அதில் எனது புது விதம்.  நீ பார்ப்பவை எல்லாம் படங்கள் அல்ல  விழிகள் சொல்கின்றன.  படங்களில் என்ன படிப்பது  பாடமா? படிப்பினை இல்லாத படங்கள்  வெறும் வண்ணக் கலவையா?  வெறும் வண்ணக் கலவைக்கும்  என்னுள்ளம் உருகுவதேனோ? நீ கேட்பவை எல்லாம் பாடல்கள் அல்ல  செவிகள் சொல்கின்றன.  பாடல்களில் என்ன பார்ப்பது  நுட்பமா?  நுட்பங்கள் இல்லாத பாடல்கள்  வெறும் ஓசைக் குலவியா? வெறும் ஓசைக் குலவியிலும்  என்னுள்ளம் ஒன்றிக் குவிவது ஏனோ? ரசிகர்கள் பல விதம்  நான் ஒரு விதம்.  ரசனைகள் பல விதம்  எனது புது விதம்.  பார்க்கும் அனைத்தையும்  பரிவுடன் பரிசீலிக்கிற,  கேட்கும் அனைத்தையும்  கனிவுடன் கவனிக்கிற  என்னுள்ளமே நான் எனில்  என்னை எனக்குப் பிடிக்கிறது.  என்னை எனக்குப் பிடிப்பதால் விமர்சனங்கள் ஆயிரம் இருப்பினும்  எனக்குப் பிடிக்கிறது  எப்போதும் எல்லாமும் எல்லோரும். எல்லாமும் எல்லோரும்  எப்போதும் எனக்குப் பிடிப்பதால்  உள்ளுக்

Religion(s) Vs Spirituality - Duality Vs Singularity........

Image
                                                                                           'Religion' requires one or more God for its existence. Since religion is based on the belief that there is God who creates, provides sustenance to these creatures for a designated time period and then destorys these creatures, the creatures are strongly advised to fear this God, worship It and pray to It either to thank for the sustenance or to ask for more of it or for both. The worship and prayer involves rituals depending on which religion the creature belongs to or follows & practices. This Creator/God and creatures relationship is called 'duality' since there are two entities: God/Creator & creatures.  'Spirituality' on the other hand, irrespective of the religion, is beyond religion and its believes and focused on helping creatures to overcome this belief in 'duality' and realize 'singularity - there is only God and nothing else; all that is exi

வாராயோ என் தோழி வாராயோ?

Image
                                                                                       உடல் முதிர்ச்சி  உண்பதின் ஊட்டம் பொறுத்து.  அறிவு முதிர்ச்சி  தேடலின் ஆழம் பொறுத்து.  மன முதிர்ச்சி  அனுபவங்களின் அதிர்வு பொறுத்து.   நிழலின் அருமை  வெயிலின் வேகம் பொறுத்து.  மழையின் அளவு  மேகத்தின் ஓட்டம் பொறுத்து.  புயலின் வேகம்  காற்றின் ஆட்டம் பொறுத்து.  படகின் ஆட்டம்  அலைகளின் அசைவைப் பொறுத்து.   நீல வானில் நிலவின் அழகு  பார்ப்பவர் கண்ணைப் பொறுத்து.  பூக்களின் புனிதம்  பூஜைக்கா பூக்கள் என்பதைப் பொறுத்து.  முகத்தின் அழகு  அகத்தைப் பொறுத்து.  அகத்தின் அழகு  இறைவனின் இசைவைப் பொறுத்து. பக்தி என்பது  தேவையைப் பொறுத்து.  தேவை என்பது  ஆசையின் அளவைப் பொறுத்து.  என்னை நீ புரிவது  என் மீதான உன் அன்பைப் பொறுத்து.  உன்னை நான் புரிவது  உன் மீதான என் அன்பைப் பொறுத்து.  என் மீதான உன் அன்பென்பது  என்னை நீ புரிவதைப் பொறுத்து. உன் மீதான என் அன்பென்பது  உன்னை நான் புரிவதைப் பொறுத்து.  அன்புடன் புரிந்து  அன்பிற்காய் புரிந்து  புரிந்ததால் நெகிழ்ந்து  நெகிழ்ந்ததால் மகிழ்ந்து  மகிழ்ந்ததால் குழைந்து குழைந்ததால் கூடி  க

ஏற்றமும் ...இறக்கமும்.....

Image
                                                                                            மூச்சு முட்ட மேலேறி உச்சம் தொட்டு,  அச்சம் தவிர்த்து, ஓஓ... ஊஊ...எனவே  உற்சாக கூக்குரலுடன்    சர்ரென சறுக்கி   தட்டென தரை தொட்டு  வெற்றிக் களிப்புடனே உச்சம் பார்க்கையில்.....  மீண்டும் மீண்டும்  மூச்சு முட்ட படிகளேறி  உச்சம் தொட்டு,  அச்சம் தவிர்த்து,  சர்ரென சறுக்கி, தட்டென தரை தொட  பிறக்கிறது ஆசை.  ஏற்றமும் இறக்கமும் இன்றி ஏது இல் வாழ்க்கை? ஏற்றமும் இறக்கமும் தானே நல் வாழ்க்கை?  உற்சாக உள்ளத்திற்கு  ஏற்றம் எளிது  இறக்கம் இனிது. உற்சாக உள்ளம் கொள்க.  ஏறி இறங்கி,  ஏறி இறங்கி எனவே  எளிய வாழ்க்கை  இன்பமாய் வாழ்க. ஏற்றத்தில் இறுமாப்பின்றி  இறக்கத்தில் கழிவிரக்கமின்றி  வருவோரை வரவேற்று  செல்வோரை வாழ்த்தி வழியனுப்பி வளங்கள் பெற்று,  வழங்கல் உற்று,  பெற்றது அற்று,  அற்றதால் மேலும் பெற்று   நீண்ட நெடுங்காலங்கள்  அன்புடன், பண்புடன்   அமைதியுடன், ஆனந்தத்துடன் என் இனியவர் நீவீர் அனைவரும் வைய்யத்துள் வாழ் வாங்கு வாழிய வாழியவே!  

Integrity.....

Image
                                                                                     "Being good for the sake of being good since it makes you feel good about yourself and let others call you a good person is not really being good. Being really good is not to make you feel good about yourself or others to call you good but just being good no matter what you may think of yourself or others may think of you". If you are always thinking that you are not good enough, then, it means that you are being good.  They say we need to live our life with integrity. In order to understand how to live our life with integrity, we need to first understand what 'integrity' means. Isn't it? Let us do that. According to Merriam-Webster, integrity is a noun and it means: "the quality of being honest and fair and/or the state of being complete and whole". As it is, I am wondering why they disagree with being honest. For ex: when I say we need to be honest in what we say and w

என்னை தொலைத்து நான் நீயாக....

Image
                                                                                            இமைகள் தாழ்கையில்  உள்ளே ஊடுருவி  உறைந்து கொள்கிறாய் இதயம் முழுதும். இமைகள் திறக்கையில்  கண்களுக்குள் வந்து  கதகளி செய்கிறாய். பார்ப்பவை என் விழிகளாயினும்  பார்த்தல் நீயே என்பதால்  நீ பார்ப்பது எல்லாம்  அட உன் முகம் தானே. அமைதியான இரவுகளிலும்  என் செவிகளுக்கில்லை ஓய்வு. இசையாக  செவிகளில்  அப்போதும் நீ.  ஆயினும்  நீ கேட்பது எல்லாம்  அட உன் குரல் தானே. நான்... ஆசையே துன்பத்திற்கு காரணம் சொன்ன  புத்தனும் அல்ல;  அனைத்திற்கும் ஆசைப்படு சொன்ன  சத்குருவும் அல்ல;  இருவருக்கும் நடுவே  இருந்து இறந்து போனவன். உள்ளத்தில் ஒளியாக, விழிகளில் வழியாக,  சொல், செயல்,  நடை, உடையென  தோற்றத்தில் நானாய் தெரியும் என்னில்  நிஜத்தில் தெரிவதென்னவோ நீயே.  உன்னில் என்னை தொலைத்தது  இத்தனை சுகமென்று தெரிந்திருந்தால்  தொலைத்தலை செய்திருப்பேன்  உன்னை உணர்ந்த நொடியிலேயே.  எடுத்தோம் கவிழ்த்தோம் என  எதையும் செய்து பழக்கமில்லையாதலால்  இத்தனை காலமாயிற்று  உன் இச்சைப்படி   நானாய்  இருந்த என் மனம்  உன் இஷ்டப்படி   நீயாய் நிலை மாற. தொல

உரக்க கத்துது கோழி.....

Image
  பெட்டைக் கோழி உரக்க கத்தியது கேட்டு    மோகத்தில் வேகமாய் நெருங்கிய வெட்கங் கெட்ட கொண்டைச் சேவலை வலியின் வெறியோடு  எட்டி உதைத்தது பெட்டைக் கோழி.  பெட்டைக் கோழிகள் எல்லாம்  எட்டி உதைக்கப் பழகி விட்டால்  கொண்டைச் சேவல்கள்  புரிந்து கொள்ளும் உரக்க கத்துதல்  கூடலுக்கு மட்டுமே இல்லை என்பதை.  கொண்டைச் சேவல்களே... உரக்க கத்துது கோழி அதற்கு வலிக்கையில் நெருங்குங்கள்  ஆறுதலோடு.  அது கிரங்கையில் நெருங்குங்கள்  காதலோடு. கொண்டைச் சேவல்களே.... ஒரு உண்மை சொல்கிறேன் கேளுங்கள்: காமம் என்று தனித்தில்லை  காதலின் உச்சம் சிறு காமம். ஆகையால்.... காமம் தவிர்த்து காதல் பெருக்குங்கள்.  இல்லையேல்.... உங்கள் கொண்டை நசுங்க வெறியோடு எட்டி உதைக்கும்  எங்கள் பெட்டைக் கோழிகள்.  நினைவில் இருக்கட்டும்  இவை பெட்டைக் கோழிகள்.  பொட்டைக் கோழிகள் அல்ல.

காலமெல்லாம் காதல் வாழ்க....

Image
  நிலவை இழந்த வானம் இருண்டது மழையை இழந்த மேகம் வெளிர்த்தது உன்னிடத்தில் தன்னை இழந்த என் மனமோ  ஒளிர்ந்தது; சிலிர்த்தது.  இழப்பென்பது இங்கில்லை  பெறுகையில் பிரமிப்பு   கொடுக்கையில் கொண்டாட்டம்  கொடுப்போம்..  கொடுத்தலை கொண்டாடுவோம்.  பெறுவோம்....  பெற்றதை போற்றுவோம். அன்பிற்காக அன்பினால்  உள்ளம் தலைப்படுகையில்  பண்பினால் அது பண்பட்டு  நம்மை கேட்பவர் செவிகளில்  மீட்டும் இனிய சங்கீதம்;  நம்மை பார்ப்பவர் விழிகளில்  விரிக்கும் பரவசப் புல்வெளி.  கொண்டாடி கொடுப்போம்  போற்றிப் பெறுவோம்.  அன்பினால் தலைப்பட்டு,  பண்பினால் பண்பட்டு  இசைப்போம் இனிய சங்கீதம்;  பரப்புவோம் பரவசப் புல்வெளி.  "காலமெல்லாம் காதல் வாழ்க"

டமால் ...டுமீல் ...திடும்....டுடும்

Image
  டமால் ...டுமீல் ...திடும்....டுடும்  வெடிச்சத்தம் வீட்டிற்கு வெளியே  சில்...சில்..சல்...சல்  சந்தோச சங்கீதம் வீட்டினுள்ளே  ஊரெங்கும் திருவிழா  ஆராவாரமாய்  உள்ளுக்குள் அன்புப் பெருவிழா  அமைதியாய்  வெளியே ஓடினேன்  உள்ளம் ஆராவாரமாயிற்று  உள்ளே திரும்பினேன்  உள்ளம் அமைதியாயிற்று  வெளியே ஓடினேன்  ஆராவாரம்  உள்ளே திரும்பினேன்  அமைதி  வெளியே ஓடினேன் உள்ளே திரும்பினேன்  வெளியே ஓடினேன்  உள்ளே திரும்பினேன்  ஆராவாரம்  அமைதி  ஆராவாரம்  அமைதி  கனப்பொழுதில்  தன்னிலை மாற்றிக் கொள்ளும் இந்த வித்தை எப்போது பழகிற்று என் மனம்?   ஆச்சர்யம், ஆனந்தம். டமால் ...டுமீல் ...திடும்....டுடும்  வெடிச்சத்தம் வெளியே;  சில்...சில்..சல்...சல்  சந்தோச சங்கீதம் எனக்குள்ளே.

எங்களின் அன்பு....

Image
  நீல வானை கடந்தன வெள்ளைப் பறவைகள்....  வானம் வெள்ளையானது;  பறவைகள் நீலமாயின.  மழை பொழிந்தது....  மண் மகிழ்ந்தது  ஆனால் வானம் வறண்டது  மழை மேகங்கள் இல்லாது. உன்னை நான் கடந்தேன்.......  என் நேசம் உன்னிடத்தில்  உன் சுவாசம் என்னிடத்தில்.  ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டுமாம் உன் அன்பை பொழிந்தாய் என் மீது  என் உள்ளம் நெகிழ்ந்தது,  உன் உள்ளம் மகிழ்ந்தது.  இழப்பில்லை இங்கே எவருக்கும்.  இந்த விந்தை எப்போதும் நிகழ்வதெப்படி? அன்பு.... எத்தனை கொடுத்தாலும் குறைவதில்லை  எத்தனை பெற்றாலும் நிறைவதில்லை  வெள்ளையாய் மாறும் நீலவானில்லை  நீலமாய் மாறும் வெள்ளைப் பறவையில்லை. என்னை இழந்து நான் அவளைப் பெறுவதில்லை  தன்னை இழந்து அவள் என்னைப் பெறுவதில்லை  நான் நானாக என் போக்கில்  அவளை என் அறிவிலும் உணர்விலும் சுமந்து.  அவள் அவளாக  என்னை தன் உயிரில் சுமந்து. என்னை நான் இழக்காத;  அவளை அவள் இழக்காத;  அற்புதம் எங்களின் எங்கள் மீதான அன்பு.  இறுமாப்பில்  நிமிர்ந்து மட்டுமே நிற்பதில்லை நாங்கள்  தன்மையாய்  வளைந்தும் நிற்கிறோம் அவ்வப்போது.   நாங்கள் வளையும் போதெல்லாம்  பிரபஞ்சம்  எங்களை வாழ்த்துகிறது வாய்ப்பு கிடைத்த மகிழ

சுப்ரபாதம் ......

Image
  வண்ண மலர்களை கொண்டு  நித்தமும் சுப்ரபாதம் சொல்லும்  சூப்பர் பரதம் நீ  உன் சொல்லிலும், செயலிலும்  எத்தனை நளினம்  எத்தனை நயனம்  பரதம் புரிகிறதோ இல்லையோ  உன் சொல்லும் செயலும்  நீ சொல்வதை விடவும்  நீ செய்வதை விடவும்  தெளிவாகவே புரிகிறது  நீ சொல்வதும் செய்வதும்  உனக்கே புரிந்ததை விடவும்  நீ யோசிப்பதை நான் நேசிக்கிறேன்  நீ நேசிப்பதை நான் யோசிக்கிறேன்  அடுத்த கட்டம் நகர எனக்கு எண்ணமும் இல்லை  எண்ணமில்லாததால் எந்த அவசரமும் இல்லை  நிகழ்த்துவது நானென்றால்தானே  அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்த  ஆர்வம் இருக்கும் எனக்கு  நடப்பது நடக்கட்டும் கிடைப்பது கிடைக்கட்டும்  நான் ரொம்ப தெளிஞ்சவன்டா  இருக்குற வரையிலும் எது வந்த போதிலும்  ஏத்துக்க தெரிஞ்சவன்டா