Posts

சஹாரா பூக்கள் பூத்ததோ....

Image
  உச்சத்தில் சூரியன் உக்கிரமாய். எப்போதும் பூக்கும்  வேர்வைத் துளிகளின் இடத்தில்  இப்போது பூக்களாய் பனித்துளிகள். காதை கொடு  கிசுகிசுக்கிறேன் காரணத்தை. உன் செவிகளின் அழகில்  என் இதழ்கள் இறக்காமல் இருக்குமானால்.   நேத்தைக்கு 'செல்லோ'... சரி...தட்டச்சு தவறாக இருக்கலாம்  என கடந்தேன் தளர்வுடன். இன்றைக்கு அன்பில் துடிக்கும்  உன் அழகு இதயம்...  பார்த்ததும் கேட்டது பாடல்: "சஹாரா பூக்கள் பூத்ததோ?" காண்பது நிஜம்தானா?  தட்டச்சு தவறு என்பது போல, கண்களை சோதிக்க வேண்டுமென  கடந்து போக முடியவில்லை இதையும்.   தவிக்கிறேன், துடிக்கிறேன். எப்படி அறிவேன் நிஜம்தான் இது என்று? இங்கு... உச்சத்தில் சூரியன் உக்கிரமாய். உடலுக்கு வெளியே சஹாரா, உள்ளத்தினுள்ளோ அண்டார்டிகா.  இருபது வயது பையனின் இதயம் போல ஐம்பது வயதில் பட படக்கிறது  அரைக்கிழவனின் அழகு இதயம். என் இதயம் அழகு என்பதை அறிவேன்  நீயே அழகாய் அதை அலங்கரிப்பதால்.   கண்களில் இருக்கலாம் கோளாறு  உன்னை அவை பார்ப்பதில்லையே! ஆனால்... உன்னை சுமக்கும் என் உள்ளத்தில் ஏனிந்த பேஜாரு?! உன்னிடத்தில் இல்லையே கோளாறு.   நிஜமாகவே  இருக்க வேண்டும் உள்ளத்தில்

தென்றல் வந்து தீண்டும் போது .....

M: உன்னை நானும் பார்த்ததாலே  என்ன வண்ணமோ மனசுல  என்னை நீயும் பார்த்ததாலே  என்ன வண்ணமோ நினைப்புல  நித்தம் நித்தம் கேக்குதம்மா  நெஞ்சினிலே உன் சத்தம்மம்மா  உன் சத்தத்துக்கு ஏத்தபடி  என் எண்ணமெல்லாம் மாறுமம்மா  மென்மையம்மா உன் உள்ளத்த நானும் கண்டேன்  கண்ணம்மா நீ என் செல்ல பெண்ணே  உன்னை நானும் பார்த்ததாலே  என்ன வண்ணமோ மனசுல  என்னை நீயும் பார்த்ததாலே  என்ன வண்ணமோ நினைப்புல  F:  ஏனென்று தெரியாமலே  என் மனசும் மயங்குது  நம் உறவு புரியாமலே  என் உசுரும் உருகுது 

ஆடம் ஆப்பிளும் ....ஆலகால விஷமும்

Image
                                                                                            அவனுக்குத் தெரியாதா  ஆலகால விஷம் அவளென்றே இருந்தும் ஏன் விழுங்கினான்  அலறிப் புடைத்து ஓடி வந்து  சங்கைப் பிடிப்பாள்  விழுங்கிய நஞ்சு  இரைப்பைக்குள் வீழாமல்  தொண்டைக் குழியில்  காலத்திற்கும் சுற்றித் திரியட்டும்  என்கிற திட்டமோ  அப்பாவி குரல் பெட்டி  அவன் விட்ட கதையில்  ஆடம் ஆப்பிள் ஆனது  இவன் விட்ட கதையில்  ஆலகால விஷம் ஆனது  ஆணின் குரலாக பெண்  அவனுக்கு ஆடம் ஆப்பிள்  பெண்ணின் குரலாக ஆண்  அவளுக்கு ஆலகால விஷம்  என்று எப்போதடா  புதுக்கதை விடப் போகிறீர்கள்?  எக்கேடோ கெட்டுத் தொலையுங்கள்  நீங்கள்.  பக்கோடா சாப்பிட பறந்து போகிறேன் நான். 

வாழ வைக்கும் காதலுக்கு ஜே.....

Image
                                                                                        விடாது கொட்டிய மழையில்  கட்டாந்தரை களிமண் பூமி  களகளத்து கொழ கொழ சகதியானது.  வீட்டில் வேண்டுமளவும் வெங்காயம் இருக்க  இன்னும் கொஞ்சம் வாங்கிவரச் சொல்லி  எதற்காக இந்த வெங்காயத்தை  விரட்டி அடிக்கிறாள்  என் காதல் மனைவி?  வியப்போடு வெளியேறினேன் வெள்ளை வேட்டியும் சட்டையுமாய்.  கொழ கொழ சகதிகளுக்கு நடுவே  நடை பயணம் நகைச்சுவை ஆனது.  வித்தைக்காரன் போல் தத்தித்தாவி  கடைவீதி சென்று திரும்பியாயிற்று  கஷ்டப்பட்டு.  வெற்றிக் களிப்புடன்  திரும்பி வந்தவனை  விரக்தியோடு பார்க்கிறாள் விஷமக்கார வாழ்க்கைத் துணைவி.    வீட்டில் வேண்டுமளவும் இருக்க  மேலும் வாங்கிவரச் சொல்லி  எதற்காக விரட்டி அடித்தாளோ  என் காதல் மனைவி? அப்போது புரியாதது  இப்போது புரிகிறது. வெளியே.... ஊரே வெள்ளத்தில் அல்லாடிக் கொண்டிருக்க  உள்ளே.... அவள் அடுக்களையில் அல்லாடிக் கொண்டிருக்க,   கொஞ்சமும் வெட்கமின்றி  கொதிநீர் கேட்டு வாங்கி  கூல் ஆக குளித்து முடித்து  அயர்ன் செய்த வேட்டி சட்டை அணிந்து  நடு கூடத்தில் நச்சென வந்தமர்ந்து  சூடாக ஒரு காப்பி கேட்ட கோபத

விடுகதையோ இந்த வாழ்க்கை ........?

Image
                                                                                  வினாவுக்கான விடையாக  விடுகதையே வாழ்க்கை எனில்  விடையில்லா விடுகதை ஏது? விடுகதையே வாழ்க்கை எனில் வாழ்க்கையின் விடை எது?  எவனோ விடுகதை விடுப்பவன் ? ஏனோ அவன் அதை விடுப்பது? இந்தக் கேள்வியும் எந்தக் கேள்வியும்  இல்லாத வாழ்க்கை கேலி. இந்தக் கேள்வியும் இன்னும் கேள்விகளுமென  இருக்கும் வாழ்க்கை மலர் வேலி. இந்தக் கேள்விக்கும் எந்தக் கேள்விக்குமான  பதில்கள் உங்கள் பக்கத்தில்.  தட்டுங்கள் திறக்கப்படும்,  கேளுங்கள் கொடுக்கப்படும்.  எவனோ விடுகதை விடுப்பவன் ? விடுப்பவன் இறைவன். ஏனோ அவன் அதை விடுப்பது ?  விடுப்பது விடை தரவே. இப்படி..... இந்தக் கேள்விக்கும் எந்தக் கேள்விக்குமான  விடை தெரிந்தவன் வாழ்க்கைப் பாதையில்  எப்போதும் விடியலின் வெளிச்சம். ஆஹா ... தெள்ளத் தெளிவான வாழ்க்கைப் பயணம்  அவனுக்குத் தான் எத்தனை சுகம்.  இந்தக் கேள்விக்கும் எந்தக் கேள்விக்குமான விடை தெரியாதவன் வாழ்க்கைப் பாதையில்  என்றென்றும் அஸ்தமனத்தின் கும்மிருட்டு. அய்யோ .... தட்டுத் தடுமாறும் வாழ்க்கைப் பயணம்  அவனுக்குத் தான் எத்தனை அச்சம்.  சுகமிருக்க

மாக்களாய் மக்கள்....

Image
                                                                                                 கேட்கிறீர் நீவீர் இரவில் விழிப்பு  பகலில் உறக்கம் ஏன் எனவே. உண்மைகளை  இலட்சம் இலட்சமாய்  கொட்டிக் கொடுக்குது இரவு,  பகல் பொழுது தருவதில்லை  பத்து பைசா எனக்கு என்கிறேன் நான். "ஐயனே தவிர 'ஐ' என்றில்லை என்கிற உண்மை அறிந்து கொள்ள  உதவும் கரை இரவு; இவ்வுண்மை உணராதவரை  உதவா கரை பார் போற்றும் பகல்.  சிந்திக்கத் துணிவீரோ நீவீர்?" - உண்மை சொல்லி  உரக்க கேட்கிறான் நம் இறைவன். ஊர் உறங்கையில் விழிப்பும்  ஊர் விழிக்கையில் உறக்கமும்  இயற்கை குறித்த வெறுப்பில் விளைந்தது அல்ல. இயல்பான சிந்தனை வறண்டு மாக்களாய் போன என் மக்கள் குறித்த வேதனையில் மலர்ந்தது அது.  முன் தூங்கி முன் எழாமல்  பின் தூங்கி பின் விழித்தல்  முரண் என முனகுகின்றீர்.   முரணல்ல அது அரண் என்றறிவீரோ? ஊரோடு ஒத்து வாழ் என்கிறீர்.  வெற்று ஊரோடு ஒத்து வாழ்வதெப்படி? வெற்று ஊரா என வியக்கிறீர்.  மந்தை மந்தையாய் மாக்களை மக்கள் என்கிறீரா? மக்கள் மாக்களா என விளிக்கிறீர்.  சிந்திக்க மறுக்கும் மக்களை மாக்கள் என நானா சொன்னேன்? சிந்திப்பதா

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

Image
                                                                                  இயல் இசை நாடகம் என  கலைகள் பல விதம்.  கலைகளின் ரசிகர்கள் பல விதம்  அதில் நான் ஒரு விதம்.  ரசிகர்களின் ரசனைகள் பல விதம்  அதில் எனது புது விதம்.  நீ பார்ப்பவை எல்லாம் படங்கள் அல்ல  விழிகள் சொல்கின்றன.  படங்களில் என்ன படிப்பது  பாடமா? படிப்பினை இல்லாத படங்கள்  வெறும் வண்ணக் கலவையா?  வெறும் வண்ணக் கலவைக்கும்  என்னுள்ளம் உருகுவதேனோ? நீ கேட்பவை எல்லாம் பாடல்கள் அல்ல  செவிகள் சொல்கின்றன.  பாடல்களில் என்ன பார்ப்பது  நுட்பமா?  நுட்பங்கள் இல்லாத பாடல்கள்  வெறும் ஓசைக் குலவியா? வெறும் ஓசைக் குலவியிலும்  என்னுள்ளம் ஒன்றிக் குவிவது ஏனோ? ரசிகர்கள் பல விதம்  நான் ஒரு விதம்.  ரசனைகள் பல விதம்  எனது புது விதம்.  பார்க்கும் அனைத்தையும்  பரிவுடன் பரிசீலிக்கிற,  கேட்கும் அனைத்தையும்  கனிவுடன் கவனிக்கிற  என்னுள்ளமே நான் எனில்  என்னை எனக்குப் பிடிக்கிறது.  என்னை எனக்குப் பிடிப்பதால் விமர்சனங்கள் ஆயிரம் இருப்பினும்  எனக்குப் பிடிக்கிறது  எப்போதும் எல்லாமும் எல்லோரும். எல்லாமும் எல்லோரும்  எப்போதும் எனக்குப் பிடிப்பதால்  உள்ளுக்