Posts

Showing posts from October, 2013

"நல்லதோர் வீணை செய்தே....."

Image
"நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ" நல்லதாக எனைச் செய்தே புழுதியில் எறிவது போலே இந்தப் புவியில் எறிந்தது ஏனோ? "சொல்லடி சிவசக்தி சுடர் மிகும் அறிவுடன் ஏன் என்னை படைத்தாய்" சுடர் மிகும் அறிவுதான் எனைத் தொட்டவன் சொல்கிறான் வெகு சீக்கிரம் நான் சூடாவதாய் மெழுகாய் இல்லை நான் உருகி ஓடியதை உருட்டித் திரியூட்டி மீண்டும் எரியூட்ட. எரிகிறேன் நான் என் வெளிச்சத்தில் இல்லை எவருக்கும்  விடியல் எனக்கே தவிர. பஞ்சுப் பொதியாய் நான் பற்றிப் பிடித்துக்கொள்கிறேன் நீ எறியும் ஒவ்வொரு தீ குச்சியையும் நடக்கையில் தெரியுது நிழலில் நிழலாய் என் சாம்பல் உடல் இருக்கையிலேயே உயிரை எரிப்பது இதுதானோ? புழுதியால் படைத்ததை புழுதியில் எறிந்ததும் உன் இஷ்டம் எறிந்ததை எரிப்பதும் உன் இஷ்டம் உன் இஷ்டம் கொஞ்சம் என் கஷ்டம் இருப்பினும் இல்லை சிறு கஷ்டத்தில் பெரும் நஷ்டம் புலம்பலை செய்கிறேன் புளங்காஹிதத்தோடே நீ புன்னகைப்பது புரிகிறது என் சுடர் மிகும் அறிவுக்கு "சொல்லடி சிவசக்தி சுடர் மிகும் அறிவுடன் (ஏன்) என்னை படைத்தாய்"

தொலைத்து தொலையாமல் போ.............

Image
வலிக்கையில் வலிக்கிறதென என்ன உளறல்? வலி போக வலியை வலிக்க விடு. விழி தெரிய விழியை விழிக்க விடு. துயில் போக துயிலை தூங்க விடு. நித்தமும் நடக்குது இரட்டை வாழ்க்கை நீயா தூங்கி நீயா விழிக்கிறாய்? நீ உண்மையறிய உன்னை உறங்கச் செய்கிறேன்; நீ பொய்யைத்  தொடர உன்னை பிறக்கச் செய்கிறேன். இறக்கச் செய்து உறங்கச் செய்கிறேன்; உறங்கச் செய்து பிறக்கச் செய்கிறேன். நித்தமும் நடக்குது இரட்டை வாழ்க்கை நீயா தூங்கி நீயா விழிக்கிறாய்? செத்துப் பிழைத்து செத்துப் பிழைத்தெனவே இறப்பையும் பிறப்பையும் இடுக்கிலே கட்டிக் கொண்டலைகிறாய்; இதிலே நான் நானெவே எனது எனதெனவே இனிமையில்லா இளிப்பெதற்கு? உன்னை உனக்கு கொடுத்தது என்னைத் தூக்கியெறிந்து உன்னில் நீ உறைவதற்கல்ல உன்னைத் தூக்கியெறிந்து என்னில் நீ மறைவதற்கு. தொலைந்து போ; உன்னைத் தொலைத்து என்னில் தொலைந்து போ. என்னில் தொலைந்து என்றும் தொலையாமல் போ. எவன் சொன்னான் என்னை நேசித்தாலே உன்னை நான் நேசிப்பேன் என்று? அவனிடம் சொல் நான் உன்னை நேசிப்பதாலேயே நீ என்னை நேசிக்கிறாய் என்று; நான் உன்னை நேசித்தாலே நீ என்னை நேசிப்பாய்  எ