Posts

Showing posts from March, 2012

ஆணும், பெண்ணும்....இறைவனும்

Image
அன்று...... கம்பீரமான ஒரு ஆணையும் கலக்கலான ஒரு பெண்ணையும் பார்க்கையிலே உள்ளத்தில் ஏக்கம் வந்தது.   கற்பனையில் கம்பீரம் கொண்டதும் கலக்கலான பெண்ணை கயமையால் களவாட அதே கற்பனையில் மனம் இராவண புத்தி போதித்தது; படைப்பில் கவனம் நிலைத்து படைப்பவனை உள்ளம் உதாசீனம் செய்தது.   இன்று.... கம்பீரமான ஒரு ஆணையும் கலக்கலான ஒரு பெண்ணையும் பார்க்கையிலே உள்ளுக்குள் கை குவித்து, நெற்றி நிலத்திலே பட  அடடே இன்னா மஜாவான ஆளுப்பா நீ என கம்பீரத்தை ஆணிலும் கலக்கலை பெண்ணிலும் படைத்தவனின் படைப்பாற்றலை உள்ளம் பாராட்டி பரிதவிக்கிறது; படைப்பின் மீதான கவனம் சிதைந்து படைப்பவனின் மீதே உள்ளம் நிலைக்கிறது;   படைப்பவனை பற்றியே சிந்தனை நீள்கிறது. ஆண் அவன் ஆணவம் அல்ல; பெண் அவள் பேதமை அல்ல; ஆண் அவன் ஆண்டவனின் ஆளுமை; பெண் அவள் ஆண்டவனின் மேன்மை. என்னையும் என் போன்ற உங்களையும் காண்கையில் நான் ஆண்டவனின் ஆளுமை உணருகிறேன்;   என்னவளையும் என் அவள் போன்ற பெண்களையும் காண்கையிலே நான் ஆண்டவனின் மேன்மை உணருகிறேன்.   நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பர் வெயில் தன் அருமை அதன் நிழலில் அறியும் என்கிறேன் நான்   ஆண் கம்பீர